துபாய் ஓபன் டென்னிஸ்: ரைபகினா விலகல்..குரோஷிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்

துபாய் ஓபன் டென்னிஸ்: ரைபகினா விலகல்..குரோஷிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

துபாய்,

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, குரோஷியாவின் அண்டோனியா ருசிக் உடன் மோதினார்.

ரைபகினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார்.அண்டோனியா ருசிக் 2வது செட்டை 6-4 என வென்றார். 3வது செட்டில் அண்டோனியா ருசிக் 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ரைபகினா காயத்தால் விலகினார். இதனால் குரோஷிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com