பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இறுதி போட்டிக்கு தகுதி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
image courtesy: BAI Media twitter
image courtesy: BAI Media twitter
Published on

பாரிஸ்,

பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் சோய்-கிம் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com