ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது

இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடிகள் தோல்வி அடைந்தன.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது
Published on

கோலூன்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோலூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 8-21, 14-21 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயூ-சித்தி பாட்டியா சில்வா இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா இணை 18-21, 7-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மாயு மட்சுமோட்டோ-வகானா நகஹரா கூட்டணியிடம் வீழ்ந்து நடையை கட்டியது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வியை தழுவிய நிலையில், இரட்டையர் பிரிவிலும் தோல்வி அடைந்ததன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com