Image Courtesy: @BAI_Media
Image Courtesy: @BAI_Media

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இந்தியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
Published on

புதுடெல்லி,

இந்தியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-6, 21-19 என்ற நேர்செட்டில் சீனாவின் சோய் டின் சென்னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் சரிவில் இருந்து மீண்டு வந்து 16-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் 19-ம் நிலை வீரரான லக்ஷயா சென்னுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டம் 79 நிமிடம் நீடித்தது. 2-வது சுற்றில் பிரியன்ஷூ ரஜாவத், பிரனாயை சந்திக்கிறார்.

இன்னொரு இந்திய வீரரான கிரண் ஜார்ஜ் 12-21, 15-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் வாங் ஜூய் வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணை 9-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லீ யாங்-வாங் சி லின் ஜோடியிடம் தோற்று நடையை கட்டியது.

இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை 21-18, 14-21, 13-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நமி மட்சுயம்-சிஹாரி ஷிதா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com