

புதுடெல்லி,
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கர், முன்னாள் உலக சாம்பியன் ருத்ரான்ஷ் பட்டீல், இஷா சிங், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், இளவேனில், அனிஷ் பன் வாலா, சுருச்சி, ரைஜா தில்லான், மகேஸ்வரி சவுகான் உள்பட 30 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.