இந்திய ஓபன் பேட்மிண்டன்; இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

இந்திய ஓபன் பேட்மிண்டனின் இரட்டையர் இறுதி போட்டிக்கு இந்திய இணை முன்னேறி உள்ளது.
இந்திய ஓபன் பேட்மிண்டன்; இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்
Published on

புதுடெல்லி,

புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் ஸ்டேடியத்தில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் இரட்டையர் போட்டி ஒன்றில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, பிரான்ஸ் நாட்டின் பேபியன் டெல்ரூ மற்றும் வில்லியம் வில்லெஜர் இணையை எதிர்த்து விளையாடியது.

37 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-10, 21-18 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் இணையை வீழ்த்தி இந்திய வீரர்கள் இறுதி சுற்று போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com