சர்வதேச பேட்மிண்டன்; பிரியன்ஷூ ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

லக்னோ,

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், இந்தோனேஷியாவின் அல்வி பர்ஹான் உடன் மோதினார்.

வெறும் 49 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் ரஜாவத் 21-15 மற்றும் 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com