ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டு போட்டிகளை ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு

ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டு போட்டிகளை ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு
Published on

சுவிட்சர்லாந்து,

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளதாவது :

ரஷ்ய மற்றும் பெலாரஷிய அரசாங்கங்கள் ஒலிம்பிக் ஒப்பந்தத்தை மீறியுள்ளன. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கு முழுமையான முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதனால் ரஷ்யா மற்றும்

பெலாரஷியாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றவும் அல்லது ரத்து செய்யவும் அனைத்து விளையாட்டு கூட்டமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com