ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி தோல்வி

கோப்புப்படம்
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது.
டோக்கியோ,
மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவில் முதலாவது சுற்றில் இந்தியாவின் ருதபர்னா பாண்டா- சுவேதா பர்னா பாண்டா ஜோடி, ஜப்பானின் இஷிகாவா- மைகோ கவாஜோ ஜோடியை எதிர்கொண்டு ஆடியது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ருதபர்னா பாண்டா- சுவேதா பர்னா பாண்டா ஜோடி 13-21, 7-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் இஷிகாவா- மைகோ கவாஜோ ஜோடியிடம் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





