ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் கண்டா சுனேயாமா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானின் கண்டா சுனேயாமாவிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com