பிரேசில் ஒலிம்பிக் போட்டி - 2 தங்கம் வென்று மதுரை மாணவி அசத்தல்

பிரேசிலில் காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடந்து வருகிறது
பிரேசில் ஒலிம்பிக் போட்டி - 2 தங்கம் வென்று மதுரை மாணவி அசத்தல்
Published on

பிரேசிலில் காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அனிகாவும், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையும் மோதினர்.

விறுவிறுப்பான இந்த போட்டியில் 21-17, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார் .

இதனை தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் மலேசியா நாட்டை சேர்ந்த கலப்பு இரட்டையர் ஜோடியை எதிர்த்து ராஜஸ்தானை சேர்ந்த அபினவ் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஜெர்லின் அனிகா விளையாடினார் ,

இந்த போட்டியில் 21-14, 21-7 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றனர் .

பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி 2 தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ள மதுரை பள்ளி மாணவிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தும் ,பாராட்டியும் வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com