புரோ கபடி: உ.பி.யோத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் நடப்பு சாம்பியன் பாட்னா வெளியேறியது

புரோ கபடியில் உ.பி. யோத்தா அணி கடைசி லீக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் வெளியேறியது.
புரோ கபடி: உ.பி.யோத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் நடப்பு சாம்பியன் பாட்னா வெளியேறியது
Published on

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 40-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com