

டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் தனிநபர் வில்வித்தை போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டியில், இந்திய வீரர் ராகேஷ் குமார், சுலொவேகியா நாட்டின் மரியான் மரிசாக்கை 140-137 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் அடுத்த சுற்றில் அவர் விளையாடுகிறார்.
இதற்கு முன் நடந்த தகுதி நீக்க சுற்றில் ஹாங்காங்கின் காய் கா சூவென் என்பவரை 144-131 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறினார்.
போட்டி நிறைவடைய ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது, ராகேஷ் அதிரடியாக இலக்கை நோக்கி அம்புகளை அடித்து வெற்றி பெற்றார்.