

மாட்ரிட்,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்பெயினின் கிரனடாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதன் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் சைன்யம் 5-வது இடமும், பலாக் 7-வது இடமும் பெற்றனர். ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் போட் டியில் இந்திய வீரர்கள் விஜய்வீர் சித்து 23-வது இடமும், அங்குர் கோயல் 29-வது இடமும், நீரஜ் குமார் 40-வது இடமும் பெற்றனர்.