தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சமீர் வர்மா காலிறுதிக்கு தகுதி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா காலிறுதிக்கு இன்று முன்னேறியுள்ளார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சமீர் வர்மா காலிறுதிக்கு தகுதி
Published on

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் அந்நாட்டின் பாங்காக் நகரில் நடந்து வருகின்றன. இதில், போட்டி ஒன்றில் 26 வயதுடைய இந்திய வீரர் சமீர் வர்மா மற்றும் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோர் விளையாடினர்.

39 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-12, 12-9 என்ற செட் கணக்கில் சமீர் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, இன்று நடைபெறும் போட்டி ஒன்றில் மலேசிய வீராங்கனை கிசோனா செல்வதுரையை எதிர்த்து விளையாடுகிறார். இந்தியாவின் பிரனோய், மலேசியாவின் டேரன் லியூவை எதிர்த்து மற்றொரு போட்டியில் இன்று விளையாட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com