ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த விவசாயியின் மகன்

ஆசிய விளையாட்டு போட்டியில் விவசாயியின் மகன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த விவசாயியின் மகன்
Published on

ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை மகசூல் செய்து சாதனை படைத்த 16 வயதான சவுரப் சவுத்ரி ஒரு விவசாயியின் மகன் ஆவார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கலினா என்ற கிராமத்தில் பிறந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்கு முன்பு உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு இந்த ஆசிய விளையாட்டு தான், முதல் சீனியர் அளவிலான போட்டியாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com