டெல்லியில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை போட்டி துபாய்க்கு மாற்றம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் அடுத்த மாதம் (மே) 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
டெல்லியில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை போட்டி துபாய்க்கு மாற்றம்
Published on

ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எகிறி வருவதால் இந்த போட்டியை இங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள எங்களது நண்பர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆசிய குத்துச்சண்ட சாம்பியன்ஷிப் டெல்லி-துபாய் என்ற பெயரிலேயே நடத்தப்படும் என்று அமீரக குத்துச்சண்டை சங்கம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com