

லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டியில் பெலாரசை சேர்ந்த அரினா சபலென்கா, அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சபலென்கா 6-1, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.