

புதுடெல்லி,
30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டே டியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டி இந்தியாவில் நடப்பது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஒருசேர கால்பதிப்பதால் களத்தில் அனல் பறக்கப்போகிறது.
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தனது முதல் சுற்றில் சோபியா நோபிளை (அயர்லாந்து) இன்று சந்தித்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-7,21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.