

ஓசிஜெக்,
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி குரோசியா நாட்டின் ஓசிஜெக் நகரில் நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட சவுரப் சவுத்ரி மற்றும் மனு பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.