உலக துப்பாக்கிச் சுடுதல்: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்

இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
உலக துப்பாக்கிச் சுடுதல்: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்
Published on

கெய்ரோ,

உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 28 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

அரியானாவைச் சேர்ந்த 23 வயதான பன்வாலாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். பிரான்சின் கிளெமென்ட் தங்கப்பதக்கம் (31 புள்ளி) வென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com