பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லி பார்ட்டி விலகல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ஆஷ்லி பார்ட்டி விலகினார்.
பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லி பார்ட்டி விலகல்
Published on

சிட்னி,

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா அச்சத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்பதை தவிர்த்தார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com