பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜிரி லெஹெக்கா சாம்பியன்


பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜிரி லெஹெக்கா சாம்பியன்
x

image courtesy: AFP

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜிரி லெஹெக்கா, ரைய்லி ஒபெல்காவுடன் மோதினார்.

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா, உலக தரவரிசையில் 293-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவுடன் மோதினார்.

இந்த போட்டியில் லெஹாக்கா 4-1 என்ற கணக்கில் முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரைய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து ஜிரி லெஹெக்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 More update

Next Story