கனடா ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி கண்ட ஆண்ட்ரே ரூப்லெவ்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டொராண்டோ,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா) - டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.

இந்த மோதல் விறுவிறுப்பாக செல்லும் என எதிரபார்த்த வேளையில், இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட டெய்லர் பிரிட்ஸ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவை விழித்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com