சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்திய வீரர் முகுந்த் சசிகுமார் முன்னேறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சகெத் மைனெனி- ராம்குமார் ஜோடி 4-6, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் பிரான்சின் டான் ஆட்- பிளான்சேத் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் 2-வது ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முகுந்த் சசிகுமார் 7-6 , 6-3 என்ற நேர் செட்டில் மோஸ் இசார்குவை (துனிசியா) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com