டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் தகுதி சுற்று போட்டிக்காக, திவிஜ் சரண் இந்திய அணிக்கு திரும்புகிறார்.
டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்
Published on

புனே,

டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி, இத்தாலியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதிகளில் கொல்கத்தாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை ரோகித் ராஜ்பால் தலைமையிலான புதிய தேர்வு கமிட்டி நேற்று தேர்வு செய்து அறிவித்தது. இதில் ஆசிய விளையாட்டு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற திவிஜ் சரண், 2012-ம் ஆண்டுக்கு பிறகு டேவிஸ் கோப்பை போட்டிக்கு திரும்புகிறார். கால் முட்டி காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் யுகி பாம்ப்ரியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. ரோகன் போபண்ணா, பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், சகெத் மைனெனி ஆகியோர் அணியில் தொடருகிறார்கள். மாற்று வீரர் இடத்தில் சசிகுமார் முகுந்த் வைக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com