துபாய் ஓபன் டென்னிஸ்: ஆண்ட்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி

ஆண்ட்ரே ரூப்லெவ் தொடரிலிருந்து வெளியேறினார்.
Imag : AFP 
Imag : AFP 
Published on

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் குயிண்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய குயிண்டின் ஹேலிஸ் 3-6, 6-4, 7(7)-6(5) என்ற  செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் ஆண்ட்ரே ரூப்லெவ் தொடரிலிருந்து வெளியேறினார்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com