பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜி - ரியேஸ் வரேலா ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் களிமண் தரையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீராம் பாலாஜி - ரியேஸ் வரேலா மார்ட்டினஸ் (மெக்சிகோ) ஜோடி, பிரான்சின் டேன் ஆடட் - தியோ அரிபேஜ் ஜோடியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்ரீராம் பாலாஜி - ரியேஸ் வரேலா ஜோடி 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் டேன் - தியோ ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com