உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சரத்கமல், மணிகா தகுதி

உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சரத்கமல், மணிகா தகுதி பெற்றுள்ளனர்.
உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சரத்கமல், மணிகா தகுதி
Published on

லுசாயில்,

ஆசிய கான்டினென்டல் டேபிள் டென்னிஸ் போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 11-2, 5-11, 2-11, 5-11, 13-1, 11-9, 11-8 என்ற செட் கணக்கில் சீனதைபேயின் சென் ஜூ யுவை போராடி வென்றார். இதே போல் இந்தியாவின் மணிகா பத்ரா தன்னை எதிர்த்த ஹாங்காங்கின் செங்சூவை 13-11, 11-9, 11-6, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையரில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 13-11, 11-3, 10-12, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் ஈரானின் அமாதியன் அமினை சாய்த்தார். வெற்றி பெற்ற இவர்கள் 3 பேரும் மே மாதம் நடக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். கலப்பு இரட்டையரில் மணிகா-ஜி.சத்யன், இரட்டையரில் சத்யன்- சரத்கமல் ஆகியோரும் உலக போட்டி இடத்தை உறுதி செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com