அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி

கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி
Published on

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இதில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட்- டொனால்ட் யங் ஜோடியுடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com