

2-வது செட்டில் 2-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த ஆஷ்லி பார்ட்டி அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு டைபிரேக்கர் வரை போராடி வெற்றியை தன்வசப்படுத்தினார். ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் விம்பிள்டனில் இறுதிசுற்றை எட்டுவது 1980-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 13-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீராங்கனை சபலென்காவை (பெலாரஸ்) போராடி விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடக்கும் மகுடத்துக்கான ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி-பிளிஸ்கோவா மோதுகிறார்கள்.