உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி

இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி
Published on

துரின்,

லண்டனில் நேற்று முன்தினம் நடந்த கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-7 (4-7), 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 9-வது இடம் வகித்த இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 34 வயதான ஜோகோவிச் ஒட்டுமொத்தத்தில் வென்ற 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (20 கிராண்ட்ஸ்லாம்) பட்டம் வென்றவர்களான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். அத்துடன் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல் வீரராக தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு 14-வது முறையாக தகுதி கண்டு இருக்கிறார். இந்த போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நவம்பர் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.

அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்சுக்கு, பெடரர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com