கரூர்
மாவட்ட செய்திகள்
குத்துச்சண்டை போட்டி: கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
கரூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் ராஜகுமரன் 46-49 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்று, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து பதக்கம் வென்ற மாணவர் ராஜகுமாரை கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

