வில்லிவாக்கம் மக்களுக்கு உணர்ச்சி பூர்வ நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனா, திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை விட 17,302 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
வில்லிவாக்கம் மக்களுக்கு உணர்ச்சி பூர்வ நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றி அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனா, திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை விட 17,302 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய மாற்றம்! வளர்ச்சிக்கான மாற்றம்! என்பனவற்றை தங்கள் வாக்குப் புரட்சியால் சாதித்துக் காட்டி, தமிழக வெற்றிக் கழகத்தை மாபெரும் சரித்திர வெற்றி பெற வைத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி!

அதிகார மிரட்டல்கள், ஆண்ட கட்சியினர் கொடுத்த நெருக்கடிகள், வாக்குகளுக்காக வாரி இறைக்கப்பட்ட ஊழல் பணம் என்பதை எல்லாம் முற்றிலும் புறந்தள்ளி, நல்லதொரு மாற்றத்தை தொடங்கி வைத்துள்ள தமிழக வாக்காளர்களின் நேர்மையை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட என்னை, தங்கள் வீட்டில் ஒருவனாக, அண்ணனாக, தம்பியாக, மகனாக நினைத்து என்னை வெற்றி பெற வைத்த வில்லிவாக்கம் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com