

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று தமிழ்நாட்டில், ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் நமது திராவிடமாதிரி திட்டங்களின் பயனாளிகளில் குறைந்தபட்சம் ஒருவர் இருக்கிறார்.
மாநிலம் முழுவதும், வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, அது களத்திலும் காணப்படுகிறது.
2026-ஆம் ஆண்டின் தீர்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. திமுக தீர்க்கமான மக்கள் ஆணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.