2 மகன்களுடன் பெண் மாயம்

மூலக்குளம் அருகே தங்க நகைகளை எடுத்து கொண்டு 2 மகன்களுடன் பெண் மாயமானார்.
2 மகன்களுடன் பெண் மாயம்
Published on

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் அடுத்த சண்முகபுரம் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (வயது 41). அமுதசுரபி மதுபான பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி புனிதா (35). இவர்களுக்கு நரேந்திரன் (9), ராகவேந்திரன் (6 மாதம்) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சிவப்பிரகாஷ் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது தங்க நகைகள் எடுத்து 2 மகன்களுடன் புனிதா மாயமாகி இருப்பது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com