கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

உடுப்பி-

உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா சங்கரநாராயணா போலீஸ் எல்லைக்குட்பட்ட குல்லுஞ்சே கிராமத்தை சேர்ந்தவர் சந்தீபாபூஜாரி (வயது 32). இவர் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தார். சந்தீபா பூஜாரி தினமும் இரவு பணிமுடிந்து மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக சந்தீபா பூஜாரிக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது நண்பர்களிடம் ரூ. 15 ஆயிரம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் திரும்ப பணம் கேட்டனர். ஆனால் சந்தீபா பூஜாரியால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.

இந்தநிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தீபா பூஜாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரநாராயணா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சந்தீபா பூஜாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சங்கரநாராயணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com