

பந்தலூர்
பந்தலூர் தாலுக்கா எருமாடு அருகே பனஞ்சிறா பகுதியை சேர்ந்தவர் நாராயணண். இவருடையமனைவி இந்திரா (வயது 61). இவர் கடந்த 22ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க செயினை மர்ம ஆசாமி ஒருவர் பறித்துச்சென்றுவிட்டார். இதுகுறித்து நாராயணன் எருமாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து ஆசாமியை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜிபின் (வயது30) என்பவர்தான் மூதாட்டியிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.