தீபாவை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகம் முன்பு போராட்டம்


தீபாவை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகம் முன்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2017 3:40 PM GMT (Updated: 24 Jun 2017 3:40 PM GMT)

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு அ.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் தீபா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார்.

சென்னை,

தன்னை சிலர் தாக்கியதாக தீபா குற்றம் சாட்டினார்.

தீபாவை தாக்கியவர்கள் மீது இதுவரையில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அவரது அணியை சேர்ந்த வக்கீல் தொண்டன் சுப்பிரமணி உள்பட 12 பேர் நேற்று கமி‌ஷனர் அலுவலகம் முன்பு தரையில் புரண்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களை வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் கைது செய்தார். கைது செய்யப்பட்ட தீபா ஆதரவாளர்கள் 12 பேரும் சூளையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story