தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது; துரைமுருகன் பேச்சு
தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இன்று பேசியுள்ளார்.
சென்னை,
வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசும்பொழுது, தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். அ.தி.மு.க.வில், ஜெயலலிதா காலத்தில் இருந்த கட்டுக்கோப்பு இப்பொழுது இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் பத்திரிக்கைகளை படிக்க வைத்து அவர் கேட்டு கொள்கிறார் என்று பேசியுள்ளார்.
கருணாநிதியிடம் மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பேசுகிறார். யாரை பிடிக்கும் என்ற மருத்துவரின் கேள்விக்கு அண்ணா பிடிக்கும் என பதில் தருகிறார் என்றும் பேசியுள்ளார்.
வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசும்பொழுது, தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். அ.தி.மு.க.வில், ஜெயலலிதா காலத்தில் இருந்த கட்டுக்கோப்பு இப்பொழுது இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் பத்திரிக்கைகளை படிக்க வைத்து அவர் கேட்டு கொள்கிறார் என்று பேசியுள்ளார்.
கருணாநிதியிடம் மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பேசுகிறார். யாரை பிடிக்கும் என்ற மருத்துவரின் கேள்விக்கு அண்ணா பிடிக்கும் என பதில் தருகிறார் என்றும் பேசியுள்ளார்.
Related Tags :
Next Story