கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 2-வது நாளாக வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 2-வது நாளாக வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 2-வது நாளாக வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
Published on

மைசூரு:

தொடர் கனமழை

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே அணை நிரம்பிவிட்ட நிலையில் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 124.33 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 148 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரத்து 290 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் நிரம்பி உள்ளது.

தமிழகத்துக்கு...கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,283.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 675 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு கபிலா ஆற்றில் 4 ஆயிரத்து 792 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 32 ஆயிரத்து 965 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com