மதுபான கொள்கை வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி கோர்ட்டில் ஆஜர்


மதுபான கொள்கை வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி கோர்ட்டில் ஆஜர்
x

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

புதுடெல்லி,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோர்ட்டில் இந்த வழக்கை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்தார்.


Next Story