வணிகம்

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி உள்ளன.

மும்பை,

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 576 புள்ளிகள் உயர்ந்து 81,144 புள்ளிகள் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 156 புள்ளிகள் உயர்ந்து 24,871 புள்ளிகள் வர்த்தகம் ஆகிறது. ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி உள்ளன. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

SCROLL FOR NEXT