இவற்றில் மர்ம ஆசாமிகள் ஊடுருவி முடக்குவது வழக்கமாக நடக்கிறது. நடிகைகள் குஷ்பு, திரிஷா, ஹன்சிகா, ஊர்வசி ரவுத்தலா, பூஜா ஹெக்டே, அனுபமா பரமேஸ்வரன், வரலட்சுமி, ஷோபனா உள்ளிட்ட பலரது வலைத்தளங்கள் முடக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர். எனது இன்ஸ்டாகிராம் கணக்கை சில ஜோக்கர்கள் முடக்கி விட்டனர். எனவே சில நாட்கள் என்னுடைய கணக்கில் இருந்து வெளியாகும் பதிவுகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம்' என்று நஸ்ரியா கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமை முடக்கியவர்களை ஜோக்கர்கள் என்று நஸ்ரியா காட்டமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.