சினிமா செய்திகள்

குடிபோதையில் காரை ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம்

குடிபோதையில் காரை ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம், அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நான் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில், என் சக நடிகரை அவருடைய வீட்டில் இறக்கி விட்டு, என் வீட்டை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தேன். வாகன சோதனை செய்யும் போலீசார் என் காரை நிறுத்தினார்கள். என் லைசென்சும், மற்ற ஆவணங்களும் வேறு ஒரு பையில் இருந்தன.

அதனால் அவற்றை போலீசாரிடம் காண்பிக்க முடியவில்லை. நான் போதையில் இருந்திருந்தால், என்னை எப்படி காரை ஓட்ட அனுமதித்து இருப்பார்கள்?

என்னை பற்றி எந்த செய்தி வந்தாலும் எனக்கு கவலை இல்லை. போதையில் இருந்தவரை விட்டு விட்டு, எல்லோரும் என்னை ஏன் குறிவைக்கிறார்கள்? தனிப்பட்ட சுதந்திரம் இங்கே இல்லை. எனக்கு வேலை இருப்பதால், அதை கவனிக்கிறேன். கடவுள் பார்த்துக் கொள்வார். இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்