சென்னை,
ஜெய்பீம் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது என்றும் படத்தில் எந்தத் தவறும் தெரியவில்லை என்றும் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் படம் குறித்து பேசிய அவர் படைப்பாளிக்கு இருக்கும் சுதந்திரத்தோடு ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குநர் எடுத்துள்ளார் என்றும் படத்தை அனைவரும் படமாக பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் படம் பிடித்தால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், படைப்பாளி என்ற முறையில் எனக்கு படத்தில் எந்தத் தவறும் தெரியவில்லை அதனால் நான் படத்தை பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.