சினிமா செய்திகள்

உருவாகிறதா சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகம்?

கடந்த 2007-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் 'சென்னை -28'.

தினத்தந்தி

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் 'சென்னை -28'. இது அவரது முதல் படமாகும். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, வெங்கட் பிரபு சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படத்தை இயக்கினார்.

பின்னர் 2016-ம் ஆண்டு 'சென்னை- 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் வெங்கட்பிரபு. தொடர்ந்து 'மாநாடு, கஸ்டடி, தி கோட்' படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, தற்போது சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில், முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது