சினிமா செய்திகள்

ரூ.2½ கோடி கூடுதல் செலவானதாக புகார்: விஷாலின் ‘அயோக்யா’ திரைக்கு வருவது திடீர் ரத்து

ரூ.2½ கோடி கூடுதல் செலவானதாக எழுந்த புகாரால், விஷாலின் ‘அயோக்யா’ படம் திரைக்கு வருவது திடீரென ரத்து செய்யப்பட்டது.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அயோக்யா. விஷால் கையில் மதுபாட்டிலுடன் போலீஸ் வேனில் அமர்ந்து இருப்பது போன்ற இந்த படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தை நேற்று திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்தனர். இதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டு இருந்தது.