மும்பை

புனேயில் மினி பஸ் பள்ளத்தில் பாய்ந்து டிரைவர் பலி - 4 பேர் படுகாயம்

புனேயில் மினி பஸ் பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்

தினத்தந்தி

புனே, 

புனேவில் உள்ள ஸ்வர்கேட்டில் இருந்து 10 பயணிகளுடன் மினி பஸ் ஒன்று நேற்று இரவு 11 மணி அளவில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் பகுதி நோக்கி புறப்பட்டது. இரவு 2 மணி அளவில் வரந்தா காட் என்ற இடத்தில் உள்ள போர்- மகாத் ரோடு சாலையில் பஸ் சென்றுகொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் மினி பஸ்சின் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மினி பஸ் டிரைவர் அஜிங்கியா சஞ்சய் கோல்டே உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்