செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 4 பேர் பலி, 2 பேர் காயம்

மத்தியப்பிரதேசத்தில் நீமுச் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும், இருவர் காயமடைந்து உள்ளனர்.

போபால்

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் ஜிரான் மற்றும் லோட் கிராமங்களில் மின்னல் தாக்கியதில் 4 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் எஸ்.எல். ஷாக்யா கூறுகையில்,

ஜிரான் கிராமத்தில், மின்னல் தாக்கியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு பேர் பலியாகினர். அதே நேரத்தில் லோட் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 பேர் இறந்தனர் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்